குறைந்த எடை கொண்ட பாண் விற்பனை செய்த சுமார் 70 கடைகள் நேற்று (22)நுகர்வோர் சேவை அதிகாரசபையினால் சுற்றிவளைக்கப்பட்டன.
இந்த குறைந்த எடை பாண்களை உற்பத்தி செய்த பேக்கரி உரிமையாளர்கள் மீது நுகர்வோர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரசபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த பேக்கரி உரிமையாளர்களிடமிருந்தும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.