மின்சாரத் துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு தயாரித்த அறிக்கை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இதனை அவர் தனது டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்
குறித்த அறிக்கையை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையிடம் கையளிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் மாதத்துக்குள் சீர்திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்