மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட வேண்டும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தேசிய சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் .
கடந்த ஆகஸ்ட் மாதம் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருந்த போதிலும் மின்சார சபைக்கு சுமார் 12 பில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனவே தற்போது ஏற்பட்டுள்ள நட்டத்தைத் தவிர்க்க மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.