Sunday, May 25, 2025
27.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநெல் கொள்வனவுக்கு நிதி கிடைக்கவில்லையாம்

நெல் கொள்வனவுக்கு நிதி கிடைக்கவில்லையாம்

சிறு போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல் இதுவரை கொள்வனவு செய்யப்படவில்லை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நெல் கொள்வனவிற்கான நிதியை அரச வங்கிகளிடம் கோரியுள்ள போதிலும், இதுவரை அந்த பணம் கிடைக்காமையால் நெல்லை கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஷ்பகுமார குறிப்பிட்டார்.

வங்கிகளிடமிருந்து நிதி கிடைக்கும் காலம் இதுவரை அறிவிக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

கடனுக்கான வட்டி 28 வீதம் அறிவிடப்படும் என வங்கிகளூடாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

எனினும், வட்டி வீதம் அதிகம் என்பதால் அதனை குறைத்துக்கொள்வது தொடர்பில் வங்கிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளதாக அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles