Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உலகம்பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தையை சுட்டு கொன்ற தந்தை

பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தையை சுட்டு கொன்ற தந்தை

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மியான்வாலி மாவட்டத்தில் தந்தையொருவர் தனது பச்சிளம் குழந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.

இந்நபருக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, அண்மையில் 2 ஆவதாகவும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஆண் குழந்தையை எதிர்பார்த்திருந்த தனக்கு 2 ஆவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அந்நபர் கடும் கோபத்தில் இருந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பிறந்து 7 நாட்களேயான தனது குழந்தையை சந்தேகநபரான தந்தை 5 முறை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண் குழந்தையின் புகைப்படத்துடன், இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Keep exploring...

Related Articles