எதிர்வரும் நத்தார் தின கொண்டாட்டங்கள் மற்றும் அலங்காரங்களை இடைநிறுத்துமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, இம்முறை நத்தார் பண்டிகையின் போது தேவாலயங்கள் மற்றும் பிற இடங்களை அலங்கரிப்பதில் பணத்தை வீணடிக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
நாடு தற்போது உள்ள நிலையில் பல மக்கள் பசியினால் வாடுகிறார்கள் எனவும் அதனால் இந்த வருடம் நத்தார் பண்டிகைக்கு ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் நோக்கமாக இருக்க வேண்டும் என்றார்
நீர் கொழும்பு புனித தெரேசா தேவாலயத்தில் இடம்பெற்ற சமய வழிபாடுகளின் போதே பேராயர் இவ்வாறு தெரிவித்ததாகச் சிங்கள இணைய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது