தென்கொரிய சுற்றுலாப்பயணி ஒருவர் இன்று காலை வாதுவையில் உள்ள 4 நட்சத்திர சுற்றுலா விருந்தகத்தின் நீச்சல் குளத்தில் இருந்து இறந்தநிலையில் மீட்கப்பட்டார்.
43 அகவைக்கொண்ட அவர் நேற்று மாலை விருந்தகத்துக்கு வந்துள்ளார்.
இந்தநிலையில் விருந்தகத்தின் ஊழியர் ஒருவரால் குறித்த வெளிநாட்டவர் இறந்தநிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
சடலலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மரணம் தொடர்பில் வாதுவ காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.