குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் வளாகங்களின் உடமையை மீளப் பெற்றுக்கொள்ளும் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை விதிப்பதற்கான சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக 2021 செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது .
சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது .
குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நிதி சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.