கம்பஹா மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படாமல் தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கம்பஹா மாவட்டத்தின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதன்படி வெள்ளம் குறைந்தவுடன் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்வாய்கள், ஆறுகள் மற்றும் நீர்வழிப் பாதைகளை சுத்தப்படுத்துவதற்கான அவசர வேலைத்திட்டம் ஒன்றை அமுல்படுத்த வேண்டும் என்றும், அதற்குத் தேவையான முன்னேற்பாடுகளை அரசுடன் ஆலோசிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட கம்பஹா மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக நேற்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.