கொத்மலை விகாரை ஒன்றில் தெய்வ சிலையை திருடிய பெண் ஒருவர் நேற்று (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் வத்தளை பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வத்தளை பிரதேசத்தில் வசிக்கும் குழுவினருடன் சுற்றுலா சென்ற குறித்த பெண்,கொத்மலையில் உள்ள விகாரைக்கு சென்று வழிபாடு செய்த போது குறித்த சிலையை திருடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த பெண்ணிடம் விசாரித்த போது, தனது ஆழ்ந்த பக்தியின் காரணமாக இந்த சிலையை வழிபாட்டிற்காக கொண்டு வந்ததாக கூறியுள்ளார்.
கோயிலில் சிலை இல்லாததைக் கண்ட பூசாரி, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவை சோதனை செய்தபோது, பெண் ஒருவர் அதை எடுத்துச் செல்வதைக் கண்டு கொத்மலை பொலிஸில் முறைப்பாடு செய்தார்.
இதன்படி, உடனடியாக செயற்பட்ட பொலிஸார், குறித்த பெண் பயணித்த தனியார் பஸ்ஸை சோதனையிட்டதுடன், சிலையுடன் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.