22 கடன் வழங்கும் நாடுகளின் குழுவான பரிஸ் கிளப், தற்போதைய கடன் நெருக்கடியைச் சமாளிக்க இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹானுடனான சந்திப்பின் போது பாரிஸ் கிளப்பின் இணைத் தலைவர் வில்லியம் ரூஸ் இந்த உறுதிமொழியை வழங்கினார்.
ஏற்கனவே பாரிஸ் கிளப், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் இணைந்து செயற்பட அழைப்பு விடுத்துள்ளது.