Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோதுமை மா ஏற்றுமதியை தடை செய்தது இந்தியா

கோதுமை மா ஏற்றுமதியை தடை செய்தது இந்தியா

கோதுமை மா ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது.

உள்நாட்டில் கோதுமை மாவின் விலையினை கட்டுப்படுத்துவதற்காக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடரும் வெப்பமான காலநிலையில், இந்தியாவில் கோதுமையின் விளைச்சலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாணயக் கடிதம் திறக்கப்பட்டுள்ள மற்றும் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொள்வனவிற்காக ஏற்கனவே கோரியுள்ள நாடுகளுக்கு மாத்திரம், கோதுமை மாவினை ஏற்றுமதி செய்யவதற்கு இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தற்காலிக தடை மாத்திரமாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்றுமதிக்கான தடை பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர், 10 மில்லியன் டன் கோதுமை மாவினை ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles