Friday, April 10, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிலினியின் வங்கி கணக்குகளை சோதனையிட்ட சிஐடி

திலினியின் வங்கி கணக்குகளை சோதனையிட்ட சிஐடி

பல கோடி ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் 3 வங்கிக் கணக்குகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சோதனையிட்டுள்ளனர்.

அந்த கணக்குகளில் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் குறைவாகவே வைப்பில் இருப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனினும், திலினி பிரியமாலி மோசடி செய்ததாக கூறப்படும் சுமார் 250 கோடி ரூபா குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

குறித்த பணத்தை கண்டறிவதற்காக பல திணைக்களங்கள் ஊடாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles