Tuesday, July 15, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவேடுவத் தலைவருக்கு கொலை மிரட்டல்

வேடுவத் தலைவருக்கு கொலை மிரட்டல்

தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகேவுக்கு ஆதரவாகப் பேசியமைக்காக தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக வேடுவத் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோ தெரிவித்துள்ளார்.

அத்துடன், வசந்த முதலிகேவுக்கு ஆதரவாக பேச தனக்கு உரிமை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வசந்த முதலிகே தனது தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுக்காமல் நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுத்ததார்.

அவர் ஏதேனும் அநீதியை எதிர்கொண்டால் அவருக்காக பேசுவதற்கு தலைவராக எனக்கு உரிமை உண்டு. இதற்காக கொலை மிரட்டல்களை சந்திக்க நேர்ந்தது. என்னை மிரட்டும் பெயர் தெரியாத கடிதம் கூட வந்துள்ளது.

வசந்த முதலிகே ஏதேனும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டிருந்தால் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர் நிரபராதி என்றால், அவரை மேலும் காவலில் வைக்காமல் விடுவிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles