99,000 மெற்றிக் டன் கச்சா எண்ணெய் தாங்கிய கப்பலுக்கு 7 மில்லியன் டொலர்கள் செலுத்த முடியாத காரணத்தினால் , 20 நாட்களாக குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடலில் நங்கூரமிட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கப்பல் நங்கூரமிடப்பட்ட நாளொன்றுக்கு தாமதக் கட்டணமாக ஒன்றரை இலட்சம் டொலர்கள் செலுத்த வேண்டும்.
அதன்படி குறித்த கப்பலுக்கு தாமதக் கட்டணமாக 30 இலட்சம் டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்..
ஊழசயட நுநெசபல நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அடங்கிய இந்தக் கப்பல் செப்டம்பர் 20 ஆம் திகதி இலங்கை வந்தடைந்ததாகவும், அதனை விடுவிப்பது தொடர்பில் நிதியமைச்சு மற்றும் திறைசேரியுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
