பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக இடைநிறுத்தி கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் அவருக்கு வௌிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி வரையில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த காலப்பகுதியில் சம்பிக்க ரணவக்க வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்கப்படுவார் என தெரிவித்த நீதிபதி, அவரது கடவுச்சீட்டை நீதிமன்ற காவலில் வைத்திருந்தால் அதனை அவருக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டார்.
