பல்வேறு நபர்களிடமிருந்து கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த வழக்கில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியுமாலி என்ற பெண்ணுடன் தனக்கும் தொடர்பு இருப்பதாக பரவும் வதந்திகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தயாசிறி ஜயசேகர எம்.பி தெரிவித்துள்ளார்.
இன்று (10) காலை இந்த முறைப்பாட்டை சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
