நாட்டில் 110 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறையை விரைவில் நிவர்த்தி செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பிரிவின் பணிப்பாளரும் மருத்துவ உதவிகள் தொடர்பிலான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டுள்ளார்.
மருந்து தட்டுப்பாட்டை தடுக்கும் வகையில் பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.