நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள போதிலும் மக்களுக்கு வசதியான வீட்டு வசதிகள் மற்றும் உரிமைப் பத்திரங்களை அரசாங்கம் வழங்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் பிரதீப் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனவே, அடுத்த இரண்டு வருடங்களில் 30,000 உரிமைப் பத்திரங்கள் வழங்கும் வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக வீட்டுத் தொகுதிகள் நிர்மாணப் பணிகள் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பொருளாதார நெருக்கடியை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதே வேளையில் மீண்டும் நாட்டில் அபிவிருத்திப் போரை ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக உள்ளது.
கடந்த சில வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்த வீட்டுத் திட்டங்களை மீண்டும் தொடங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
கொழும்பில் உள்ள மக்களின் வீட்டுப் பிரச்சினையைத் தீர்க்க குறைந்தபட்சம் 200,000 அடுக்குமாடி குடியிருப்புகளை நாங்கள் நிர்மாணிக்க வேண்டும்.
எவ்வாறாயினும், எத்தகைய நெருக்கடிகள் வந்தாலும் இந்த இலக்கை அடைய அமைச்சு ஏற்கனவே குறிப்பிட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
திறைசேரி நிதியைப் பயன்படுத்தி சுமார் 260 நகர அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் ஐந்து திட்டங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.