முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தொடர இலங்கை உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கோட்டாபயவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்த உரிமைக் குழு அறிக்கையொன்றில் இதனைத் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்கள் இருவருக்கு எதிராகவும் வழக்குத் தொடர நீதிமன்றம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#Reuters