Tuesday, September 23, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டு5 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

5 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவை வைத்திருந்த நபர் ஒருவர் நேற்று (06) விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படை புத்தளம் முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து ஒரு கிலோ 410 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles