நாட்டின் பணவீக்கம் இந்த மாதம் மேலும் அதிகரித்து அதன் பின்னர் வீழ்ச்சியடையும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
இந்த வருடத்தின் 7வது நாணயக் கொள்கை விளக்கத்தை அறிவிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கி எதிர்பார்த்ததை விட செப்டெம்பர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த மாதம் பணவீக்கம் அதிகரித்து பின்னர் குறைவடையும் என கணிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 67.8 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அம்மாதம் பணவீக்கம் 69.8 ஆக பதிவாகியிருந்தது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, இந்த மாதத்தை விட அடுத்த மாதம் பணவீக்கம் குறைவாக இருக்கும் என்றும், தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கமைய, இந்த மாதத்தில் பணவீக்கம் அதிகரிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.