தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் உட்பட அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு அல்லது கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறினார்.
ஆசிரியர் மற்றும் அதிபர்களின் உரிமைகளை வென்றெடுத்த பிரதிநிதிகளின் மாநாட்டில் கலந்து கொண்ட போதே ஜோசப் ஸ்டாலின் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.