கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற இரவு அஞ்சல் ரயிலில் மோதுண்ட நிலையில் ஒருவர் பலியானார்.
குறித்த நபர் யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் ரயிலுடன் மோதுண்டதில் சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவமானது இன்றையதினம் அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தற்கொலை என சந்தேகிக்கப்படுவதுடன், உயிரிழந்தவர் 30 வயது மதிக்கத்தக்கவர் என ஆரம்பவிசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.