2018 – 2019 வரையிலான காலப்பகுதியல் தொல்லியல் துறைக்கு 3000க்கும் அதிகமான ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டள்ளனர்.
மத்திய கலாசார நிதிய சட்டத்தை மீறியே இவ்வூழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் கூறியுள்ளது.
இவர்களின் சம்பளத்திற்க்காக 106 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக கணக்காய்வு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் சஜித் பிரேமதாசவே விடயத்துக்கு பொறுப்பான அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.