Friday, July 18, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரண்டரை வருட வேதனத்தை மக்களுக்காக வழங்கிய எம்.பி

இரண்டரை வருட வேதனத்தை மக்களுக்காக வழங்கிய எம்.பி

மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு தனது இரண்டரை வருடங்களுக்கான வேதனம் உள்ளிட்ட ஏனைய அனைத்து கொடுப்பனவுகளையும் மீண்டும் மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு வழங்க தீர்மானித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொது தேர்தலின் போது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதனை குறிப்பிட்டிருந்ததாகவும், அதற்கு இணங்கவே தாம் இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கருணதாச கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சுமார் 120 இலட்சம் ரூபாவினை மாத்தறை மாவட்டத்தில் இயங்கும் 220 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பல்வேறு மக்கள் நல வேலைத்திட்டங்களுக்காக பகிர்ந்தளிக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கருணதாச கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles