Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலவச விளம்பரத்துக்கு நன்றி!

இலவச விளம்பரத்துக்கு நன்றி!

தாமரை கோபுரம் நாளைய தினம் முதல் மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படவுள்ள நிலையில், தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கு நுழைவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நுழைவுச்சீட்டுக்கள் தொடர்பில் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.

நுழைவுச்சீட்டுக்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

அத்துடன் அந்த நுழைவுச்சீட்டில் சீன பிரஜைகளுக்கு உள்நுழைவு இலவசம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் நுழைவுச்சீட்டு போலியானது என சீன தூதரகம் அறிவித்துள்ளது.

இலவச விளம்பரத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் சீன தூதரகம் டுவிட்டர் பதிவின் ஊடாக அறிவித்துள்ளது.

Keep exploring...

Related Articles