Monday, September 15, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிவாயு வாங்க உலக வங்கி வழங்கிய நிதியிலிருந்து 130 கோடி ரூபா கொள்ளை

எரிவாயு வாங்க உலக வங்கி வழங்கிய நிதியிலிருந்து 130 கோடி ரூபா கொள்ளை

நாட்டில் ஏற்பட்டிருந்த பாரிய எரிவாயு பற்றாக்குறையைப் போக்க உலக வங்கி வழங்கிய உதவியிலிருந்து ஒரு குறிப்பிட்ட குழுவினர் 130 கோடி ரூபாவை மோசடி செய்துள்ளதாக கோப் குழுவின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ‘சுதந்திர ஜனதா சபை’யில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

36 டொலருக்கு கொள்வனவு செய்யவிருந்த ஒரு மெட்ரிக் டன் எரிவாயுவை 129 டொலருக்கு கொள்வனவு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டமையால் இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடு கஷ்டத்தில் இருக்கும் போது உலக வங்கி வழங்கிய உதவித் தொகையை கொள்ளையடிக்கும் நிலைக்கு இந்தக் கும்பல் வந்துவிட்ட தாகக் கூறிய அவர், அந்தப் பணத்தை யார் எடுத்து யாருக்கு விநியோகம் செய்தார்கள் என்பது அப்பாவி மக்களுக்குத் தெரியாது என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles