Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய மீனவர்கள் 12 பேர் கைது

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 12 பேர் முல்லைத்தீவு, அலம்பில் பகுதியில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு கடற்படை கட்டளைப்பிரிவின் நான்காவது விரைவுத் தாக்குதல் படையணிக்கு சொந்தமான விரைவுத் தாக்குதல் படகு முல்லைத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுளை அவதானிக்கும் செயற்பாடுகளை நேற்று முன்னெடுத்தது.

அதன்போதே, சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீன்பிடி  படகு சுற்றுவளைக்கப்பட்டு 12 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கைதானவர்கள் திருகோணமலை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles