தேசிய பிறப்புச் சான்றிதழை தற்போது டிஜிட்டல் வடிவில் ஆட்கள் பதிவுத் திணைக்களம் வழங்கி வருகிறது.
ஒகஸ்ட் முதலாம் திகதிக்குப் பின்னர் பிறந்த குழந்தைகள் டிஜிட்டல் வடிவில் பிறப்புச் சான்றிதழ்களைப் பெற முடியும் என பதிவாளர் நாயகம் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழுக்கான திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
குழந்தை 15 வயதை அடையும் போது, டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழில் அவர்களின் பெயருக்கு அடுத்ததாக பட்டியலிடப்பட்ட எண், அவர்களின் தேசிய அடையாள அட்டை எண்ணாக மாறும்.
ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.