அம்பலாங்கொட – பலபிட்டி வைத்தியசாலைக்கு அருகில் நேற்று (31) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வட்டுகெதர பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு T56 ரக துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.