அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 28 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று சந்தித்துள்ளனர்.