QR குறியீட்டு திட்டம் நாட்டின் எரிபொருள் நெருக்கடிக்கு முழுமையான தீர்வாகாது என, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் தெரிவித்த முக்கியமான சில கருத்துகள்.
*நாட்டின் பொருளாதார நெருக்கடியுடன் எரிபொருள் நெருக்கடியும் வந்துள்ளது.
*பண பலம் இருந்தால் இவ்வாறான மென்பொருட்களை கொண்டு நிர்வகிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
*அடுத்த 12 மாதங்களுக்கு சில சவால்கள் உள்ளன.
*நமது நிதித் திறனின் அடிப்படையிலேயே எரிபொருளை இறக்குமதி செய்யும் திறன் நம்மிடம் உள்ளது.
*ஆதலால், இதற்குப் பொருத்தமான வேலைத்திட்டத்தை நாம் உருவாக்கினாலே ஒழிய, இதனை முழுமையான 100% தீர்வாக கருத முடியாது.