Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீதிமன்றிடம் மன்னிப்பு கோரினார் ரஞ்சன்

நீதிமன்றிடம் மன்னிப்பு கோரினார் ரஞ்சன்

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று (25) நீதிமன்றில் சத்தியக் கடதாசி சமர்ப்பித்து மன்னிப்புக் கோரியுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்தது தொடர்பான முதலாவது வழக்கு தொடர்பாகவும்இ இரண்டாவது வழக்கு தொடர்பாகவும் நீதிமன்றத்திடம் மன்னிப்புக் கோருவதாக அவரது வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் கூறிய கருத்துக்கள் முற்றிலும் தவறானவை என்றும்இ அந்த அறிக்கையால் தலைமை நீதிபதி மற்றும் சட்டத்துறையில் உள்ள அனைவருக்கும் அவமரியாதை ஏற்பட்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்காலத்தில் அவ்வாறான கருத்துக்களை வெளியிடப் போவதில்லை எனவும் அவர் நீதிமன்றில் வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles