சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் இன்று (24) காலை தொழில்நுட்ப மட்ட கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட பல அதிகாரிகள் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் குழு இந்த கலந்துரையாடலில் பங்கேற்க உள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ளனர்.