அத்தியாவசிய சேவைகளுக்கான விசேட உயர் எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்குவதற்கு தேவையான QR உள்ளீட்டை மேம்படுத்தும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று வாரங்களின் தரவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்த முன்னேற்ற மதிப்பாய்வுகளுக்கு அமைய, வாகனப் பதிவுகளின் எண்ணிக்கையும் பெறப்பட்ட எரிபொருளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
எரிபொருள் பாவனையில் குறைபாடு காணப்பட்டதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.