கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையான ‘கிரீன் கார்ட்’ கோரி விண்ணப்பித்துள்ளார்.
இந்த தகவலை தேசிய பத்திரிகையொன்று வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள அவரது சட்டத்தரணிகள் கடந்த மாதம் முதல் அவருக்கு மீண்டும் அமெரிக்க குடியுரிமை பெற்று தரும் பணியை ஆரம்பித்துள்ளதுடன், அவரது மனைவி அமெரிக்க குடியுரிமை கொண்டவர் என்பதால், அந்த வசதியை கோட்டாபயவால் பெற முடியும் என கூறப்படுகிறது.