எரிவாயு கொள்கலன்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பல செய்திகள் பரவி வருகிறது.
இது தொடர்பில் எமது செய்தி பிரிவு, லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் வேகபிட்டியவை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவியது.
அதன்போது, அவ்வாறானதொரு தீர்மானம் இதுவரையில் எட்டப்படவில்லை எனவும், அந்த செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் நாளை (05) இடம்பெறவுள்ள கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.