கொழும்பு மாவட்டத்தில் தோற்கடிக்கப்பட்டு வீட்டுக்குச் சென்ற ரணில் விக்ரமசிங்க திறமையானவர் அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானதால் மக்கள் இவ்வாறு கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
ராஜபக்ஷ திருடர் கூட்டத்தை பாதுகாப்பதாக உறுதியளித்திருந்தால் இன்று தான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்திருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.