நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நாளை முதல் கொள்வனவு செய்யப்படவுள்ள புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒரு கிலோகிராம் நாடு நெல்லை 120 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், சம்பா நெல்லை 125 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல்லை 130 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.