Friday, July 4, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாகிஸ்தானின் ஏவுகணை போர்க்கப்பல் கொழும்பு துறைமுகம்  வந்தது

பாகிஸ்தானின் ஏவுகணை போர்க்கப்பல் கொழும்பு துறைமுகம்  வந்தது

சீனாவில் தயாரிக்கப்ட்ட பாகிஸ்தானின் வழிகாட்டுதல் ஏவுகணை தாங்கிய போர்க்கப்பலான தைமூர் (PNS Taimur) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்த கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட, இலங்கை அரசாங்கம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அனுமதி வழங்கியது.

சீனாவில் கட்டமைக்கப்பட்ட PNS தைமூர் என்ற இந்த கப்பல், ஷாங்காய் நகரிலிருந்து கராச்சிக்கு செல்லும் வழியில் கொழும்புக்கு, நல்லெண்ண நோக்கில் பயணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல் எதிர்வரும் 12-15 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், பங்களாதேஷில் குறித்த கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles