முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அடுத்த வார முற்பகுதியில் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் ரஞ்சன் ராமநாயக்க தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
அவரை ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுவிப்பதற்கு பல சாத்தியமான காரணங்கள் இருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்திருந்தார்.