பிஸ்கட்டை அத்தியாவசிய பொருளாக பிரகடனம் செய்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
பிஸ்கட் வகைகளின் விலைகள் கட்டுப்பாடின்றி அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இதனை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் நோக்கில் மேற்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு செய்வதன் மூலம், நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் அனுமதியின்றி விலையை அதிகரிக்க முடியாது.