பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நிறுவனங்கள், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நாளாந்த வேதனம் வழங்க வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், குறித்த தீர்ப்பின் அடிப்படையிலும், தற்போதைய வாழ்க்கைச் செலவின் அடிப்படையிலும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 3250 ரூபா வேதனம் வழங்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.