அரசியல்சஜித்தை கைவிட தயாராகும் SJB உறுப்பினர்கள்

சஜித்தை கைவிட தயாராகும் SJB உறுப்பினர்கள்

அடுத்த வாரத்துக்குள் சஜித் தீர்மானம் எடுக்காவிட்டால், SJB குழுவொன்று கட்சியை விட்டு விலகி அரசாங்கத்தில் இணைந்து கொள்ளும் என சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று (01) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

SJB பிளவுபடுவதை தாம் விரும்பவில்லை என்றும், பலர் கட்சியை விட்டு விலக தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் தாம் இன்னும் SJBயில் அங்கம் வகிப்பதாகவும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை ஒன்றிணைக்கும் நபர் என்றும் பெர்னாண்டோ வலியுறுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles