ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும், முன்னாள் நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்க நேற்று (02) தனியார் ஹெலிகொப்டரில் மன்னாருக்கு திடீர் விஜயம் செய்துள்ளார்.
மன்னார் பொது விளையாட்டு மைதானத்திற்கு சென்ற ரவி கருணாநாயக்க, விட்டுவிட்டு சில மணித்தியாலங்களின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்காமல் அதே தனியார் ஹெலிகொப்டரில் திரும்பிச் சென்றார்.
எவ்வாறாயினும், முன்னாள் அமைச்சர் மன்னாருக்கு விஜயம் செய்தமைக்கான காரணம் துல்லியமாக வெளியிடப்படவில்லை.
அவர் தனிப்பட்ட வியாபார நோக்கத்திற்காக அங்கு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.