எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஹர்ஷ டி சில்வா இன்றையதினம் நாடாளுமன்றில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவியேற்பு உரையை ஆமோதித்தார்.
இலங்கையை ஏற்றுமதி சார்ந்த போட்டி சமூக சந்தைப் பொருளாதாரமாக அபிவிருத்தி செய்வது தொடர்பான ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் கருத்துடன் தாம் உடன்படுவதாக அவர் கூறினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்குரார்ப்பண உரையில், வளர்ந்து வரும் இந்தோ-பசிபிக் பொருளாதாரக் களத்தின் மையமாக இலங்கையை நவீன ஏற்றுமதி சார்ந்த போட்டி சமூக சந்தைப் பொருளாதாரமாக உருவாக்க வேண்டும்.
அதனை நான் நூற்றுக்கு நூறு ஒப்புக்கொள்கிறேன்.
மேலும், பொது வேலைத்திட்டத்தில் புதிய இலங்கையை உருவாக்குவதற்கு குறிப்பாக அனைத்து கட்சி அல்லது பல கட்சிகளை கொண்ட அரசாங்கத்தை அமைப்பதற்கு குறிப்பிட்ட காலத்திற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.