கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாடசாலைகள் மற்றும் பணியிடங்களில் நோய் பரவுவதை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள சுகாதார அதிகாரி அலுவலகங்களில் தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் காண பயன்படுத்தப்படும் என்டிஜென் பரிசோதனை கருவிகள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் அடுத்த பதினைந்து நாட்களில் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என தலைவர் மேலும் தெரிவித்தார்.