வென்னப்புவ – கொலின்ஜாடிய பகுதியில் சட்டவிரோதமாக படகு மூலம் பிரான்ஸுக்கு செல்ல முற்பட்ட சுமார் 50 பேரை பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
பேருந்து மற்றும் வேன் ஆகியவற்றின் ஊடாக குறித்த கடற்பகுதிக்கு சந்தேகநபர்கள் சென்றுக்கொண்டிருந்த போது, இன்று அதிகாலை பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் 6 பெண்களும், 4 சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
அவர்கள் சிலாபம், மாரவில, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.