முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி இணையத்தளத்திற்கு நேற்று (31) வழங்கிய விசேட நேர்காணலில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல எனவும், இது அரசியல் ரீதியான பதற்றத்தை ஏற்படுத்தக் கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அவர் விரைவில் நாடு திரும்புவார் என்பதற்கான எந்த அறிகுறியும் தனக்கு கிடைக்கவில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியம் இணக்கப்பாட்டுக்கு வருமென எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்நாட்டு மக்களின் பொருளாதார நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காண இன்னும் சில மாதங்கள் ஆகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.